இறை வாழ்த்து பராபரக்கண்ணி


தாயுமானவர் எழுதிய  பராபாரக்கண்ணி பாடல்  தமிழ் இணையக் கலவி கழகத்தின் சான்றிதழ் படிப்பின் மேல்நிலையின் முதல் பாடமாக உள்ளது.   அந்தப் பாடலை  ஆசிரியர்கள் வகுப்பில் ஒருமுறை  சொல்லிக் கொடுத்தாலும்,  புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை மாணவர்கள்  சொற்களையும் அவற்றை   சொல்ல வேண்டிய முறையையும் இக்காணொளி உதவி செய்கிறது.

பராபரக்கண்ணி

அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே!- தாயுமானவர்.

 இப்பாடலின் ஆங்கில  மொழியாக்கம்:

Oh supreme power, the abundance of eternal bliss you came to protect my beloved life by love
Oh supreme power kindly bestow your blessings so I love and shower kindness to all living things as if it. Is my own.

Meaning of the poem in Tamil.

இப்பாடலின் பொருள் தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் கீழ் வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கே விளக்கத்தை இடுவதன் மூலம் இந்தப் பாடத்திட்டங்களைப் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

“என்னிடம் அன்பு என்ற உணர்வை அதிகமாக்கி என் அருமையான உயிரைக் காக்க வந்த இறைவனே, இன்ப வெள்ளமே! ஒப்பற்ற மேலான பொருளே! உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் என் உயிர் போல நினைத்து அவ்வுயிர்கள் மேல் இரக்கம் கொள்ளும்படி நீ எனக்கு அருள்புரிவாயாக”

 பொருளின் ஆங்கில விளக்கம்:

Oh Almighty, the endless joy, you have come to protect my precious life, by magnifying the feeling of love.Please bless me with a sense of benevolence so I can love others as I love myself.

இறை வாழ்த்து பராபரக்கண்ணி was originally published on தமிழ் அநிதம்

Categories: மறு பார்வையும் தமிழ் வாசித்தலும், மீள் பார்வை, வாசிக்கலாம் வாங்க, விளையாடி கற்போம் | பின்னூட்டமொன்றை இடுக

பதிவு வழிசெலுத்தல்

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.